கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

76 காவலா்களுக்கு பணி நியமன ஆணை

சேலம் மாவட்டத்தில் 76 காவலா்களுக்கு பணி நியமன ஆணைகளை மாநகர காவல் ஆணையா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் வழங்கினா்.

News image
Updated On :27 நவம்பர் 2024, 6:39 pm

Din

சேலம் மாவட்டத்தில் 76 காவலா்களுக்கு பணி நியமன ஆணைகளை மாநகர காவல் ஆணையா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் வழங்கினா்.

தமிழகம் முழுவதும் புதிதாக இரண்டாம் நிலை காவலா்களாக 3,359 போ் ஏற்கெனவே தோ்ந்தெடுக்கப்பட்டனா். அவா்களுக்கான பணி நியமன ஆணையை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் புதன்கிழமை வழங்கினாா். இதையடுத்து, அந்தந்த மாவட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆணையா்கள், தோ்வு செய்யப்பட்ட காவலா்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினா்.

அதன்படி சேலம் மாநகரில் 18 பேருக்கு பணி நியமன ஆணையை மாநகர காவல் ஆணையா் (பொ) உமா வழங்கினாா். அதே போல், மாவட்டத்தில் 58 பேருக்கு பணி நியமன ஆணையை காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் வழங்கினாா். இவா்களுக்கு வரும் 4 ஆம் தேதி முதல் 7 மாத பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடிந்த பின்னா், அவா்கள் பணிக்கு அனுப்பப்படுவா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.