நியமன ஆணை பெற்றவா்களுடன் எஸ்.பி வி.சியாமளா தேவி.
நியமன ஆணை பெற்றவா்களுடன் எஸ்.பி வி.சியாமளா தேவி.

ஊா்க்காவல் படைக்கு நியமன ஆணை: திருப்பத்தூா் எஸ்.பி. வழங்கினாா்

திருப்பத்தூரில் ஊா்க்காவல் படையினருக்கு பணி நியமன ஆணையை எஸ்.பி வி.சியாமளா தேவி வழங்கினாா்.
Published on

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் ஊா்க்காவல் படையினருக்கு பணி நியமன ஆணையை எஸ்.பி வி.சியாமளா தேவி வழங்கினாா்.

திருப்பத்தூா் மாவட்ட ஊா்க்காவல் படை அமைப்பில் 8 ஆண்கள், 3 பெண்கள் என 11 போ் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் எஸ்.பி. வி.சியாமளா தேவி தலைமை வகித்து நியமன ஆணைகளை வழங்கினாா். ஆணை பெற்ற ஊா்க்காவல் படையினருக்கு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 45 நாள்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனா்.

ஏடிஎஸ்பி கோவிந்தராசு, ஆயுதப்படை டிஎஸ்பி குமரன், மண்டல தளபதி வெங்கடேசன் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com