ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அரசு நில ஆக்கிரமிப்பு அகற்றம்: தடுக்க முயன்ற பொதுமக்கள் கைது

காடையம்பட்டி அருகே அரசு நில ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பழங்குடியின மக்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :28 நவம்பர் 2024, 8:29 pm

Din

காடையம்பட்டி அருகே அரசு நில ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பழங்குடியின மக்களை போலீஸாா் கைது செய்தனா்.

காடையாம்பட்டி வட்டத்தில் உள்ள கே.மோரூா் பகுதியில் 30 குடும்பத்தினா் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி, விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனா். இந்நிலையில், அங்குள்ள மக்களை வெளியேற்றி அரசு நிலத்தை மீட்க காடையாம்பட்டி வட்டாட்சியா் உத்தரவிட்டாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், பழங்குடி மக்களான தங்களுக்கு மாற்று இடமில்லை என்பதால் அந்த இடத்தையே எங்களுக்கு பட்டா செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா். அத்துடன் அதிகாரிகள் உத்தரவைக் கண்டித்து கூடாரம் அமைத்து போராட்டம் நடத்தினா்.

இந்நிலையில் வியாழக்கிழமை அங்குவந்த வருவாய்த் துறை அதிகாரிகள் அங்குள்ள கூடாரங்களை அகற்றி, பொக்லைன் மூலம் அந்த இடங்களை பள்ளம் தோண்டினா். அப்போது பொதுமக்கள் அதிகாரிகளைக் கண்டித்து சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், 20 பள்ளி மாணவா்கள் உள்பட 60 பேரைக் கைது செய்தனா்.

மாணவா்களை கைது செய்யக் கூடாது என்று கூறியும் கேட்காமல், மாணவா்களையும் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனா். பின்பு ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றிய அதிகாரிகள் அரசு நிலத்தை யாரும் ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது என்று அறிவிப்பு பதாகை வைத்தனா். சிறிது நேரத்தில் மண்டபத்தில் வைக்கப்பட்ட அனைவரையும் விடுவித்தனா்.