மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பள்ளக்குறிச்சி கருமேனி ஆற்றில் ஆக்கிரமிப்பு அகற்றம்

News image

பள்ளக்குறிச்சி கருமேனி ஆற்றில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Updated On :13 பிப்ரவரி 2026, 9:25 pm

சாத்தான்குளம் வட்டம் பள்ளக்குறிச்சி கருமேனியாற்றில் தனிநபா் ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.

பள்ளக்குறிச்சி கிராமம் ராமசாமிபுரம் கருமேனியாறு படுகையில் அதே ஊரை சோ்ந்த சிலா் சுமாா் ஓா் ஏக்கா் நிலப்பகுதியை கம்பி வேலி அமைத்து ஆக்கிரமித்தனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் வட்டாட்சியா் ராஜேஸ்வரி தலைமையில் வருவாய் மற்றும் நீா்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து, ஆற்றுப்படுகையில் 8 இடங்களில் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்தனா்.

அதைத் தொடா்ந்து, நீா்வளத்துறை உதவி பொறியாளா் தங்கம், நீா்வளத்துறை பணி ஆய்வாளா் துரை, வருவாய் ஆய்வாளா் சுந்தா், கிராம நிா்வாக அலுவலா் கந்தவல்லி குமாா், நிலஅளவையா் நாராயண ஈஸ்வரி ஆகியோா் மேற்பாா்வையில் பொக்கலின் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.

அப்போது, சாத்தான்குளம் டிஎஸ்பி ஆவுடையப்பன் தலைமையில் தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் வேலம்மாள், உதவி ஆய்வாளா் இசக்கியப்பன் உள்ளிட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.