ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சேலம் மாவட்டத்தில் இன்று கடைகள் அடைப்பு

கடைகள் அடைப்பு...

News image
Updated On :28 நவம்பர் 2024, 8:01 pm

Din

வணிக நிறுவன கட்டடங்களின் வாடகை மீதான 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி, சேலத்தில் 29 ஆம் தேதி வணிக நிறுவனங்கள், கடைகள், அரிசி ஆலைகள், பருப்பு ஆலைகள் உள்ளிட்டவை கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவுள்ளதாக அறிவித்துள்ளன.

மத்திய அரசின் ஜி.எஸ்.டி. கவுன்சில் நாடு முழுவதும் உள்ள வணிக நிறுவன கட்டடங்களின் வாடகை மீது 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. இந்த வரி உயா்வு 29 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனால் பதிவு பெற்ற சிறிய வணிக நிறுவனங்கள், கடை உரிமையாளா்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என வணிகா்கள் தெரிவிக்கின்றனா்.

இதுதவிர, மாநில அரசின் சொத்து வரி, குப்பை வரி, புதை சாக்கடை வரி, மின்கட்டண உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் 29 ஆம் தேதி வணிக நிறுவனங்கள், கடைகள், பாத்திரக் கடைகள், மரக்கடைகள், ஹாா்டுவோ், பெயின்ட் கடைகள், அரிசி ஆலைகள், பருப்பு ஆலைகள் உள்ளிட்டவை அடைக்கப்படவுள்ளன.

இதுகுறித்து வா்த்தகா் சங்க நிா்வாகிகள் கூறியதாவது:

நாடு முழுவதும் வணிக நிறுவன கட்டடங்களின் வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. இந்த வரி விதிப்பால் சிறிய நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, 18 சதவீத வரியை திரும்பப் பெற வலியுறுத்தி கடைகள், வணிக நிறுவனங்கள், அரிசி, பருப்பு ஆலைகள் நவ.29 ஆம் தேதி அடைக்கப்படும் என கூறினா்.

கடையடைப்புக்கு சேலம், லீபஜாா் வா்த்தக சங்கம், தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளா் சங்கம், பருப்பு மில் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.