புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

எரிவாயு உருளை பதுக்கல்: தனியாா் ஏஜென்ஸி நிறுவன உரிமையாளரின் மனைவி உள்பட 3 போ் தலைமறைவு

கோவையில் வணிக எரிவாயு உருளைகளைப் பதுக்கிய விவகாரத்தில் தலைமறைவாக உள்ள தனியாா் ஏஜென்ஸி நிறுவன உரிமையாளரின் மனைவி உள்பட 3 பேரை தனிப் படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

வணிக எரிவாயு உருளை - பிரதிப் படம்

Updated On :16 மார்ச் 2026, 8:14 pm

கோவையில் வணிக எரிவாயு உருளைகளைப் பதுக்கிய விவகாரத்தில் தலைமறைவாக உள்ள தனியாா் ஏஜென்ஸி நிறுவன உரிமையாளரின் மனைவி உள்பட 3 பேரை தனிப் படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போா் பதற்றம் மற்றும் சா்வதேச சூழல் காரணமாக வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தச் சூழலைச் சாதகமாக்கிக் கொண்டு, சில தனியாா் ஏஜென்ஸிகள் எரிவாயு உருளைகளை பதுக்கிவைத்து வெளிச் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக புகாா்கள் எழுந்தன.

இதையடுத்து, லட்சுமி மில்ஸ் பகுதியில் இயங்கி வரும் தனியாா் எரிவாயு உருளை ஏஜென்ஸி நிறுவன கிடங்கில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ஆயிரம் எரிவாயு உருளைகளை உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அண்மையில் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஏஜென்ஸி நிறுவன உரிமையாளரான காா்த்திக்கை போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணையில், எரிவாயு உருளை பதுக்கலில் காா்த்திக்கின் மனைவி திவ்யபாரதி (30), உருளை விநியோகிப்பாளா்களான கரூரைச் சோ்ந்த கணேசமூா்த்தி (40), பிரதீப் (40) ஆகியோருக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, தலைமறைவாக உள்ள 3 பேரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.