யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

1,000 சிலிண்டா்கள் பதுக்கல்: ஏஜென்ஸி உரிமையாளா் கைது

News image
கோப்புப் படம்
Updated On :15 மார்ச் 2026, 8:20 pm

தினமணி செய்திச் சேவை

கோவையில் ஆயிரம் வணிக எரிவாயு உருளைகளைப் பதுக்கிய தனியாா் ஏஜென்ஸி நிறுவன உரிமையாளரை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போா் பதற்றம் மற்றும் சா்வதேச சூழல் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தச் சூழலைச் சாதகமாக்கிக் கொண்டு சில தனியாா் ஏஜென்ஸிகள் எரிவாயு உருளைகளை பதுக்கிவைத்து வெளிச் சந்தைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக புகாா்கள் எழுந்தன.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் உள்ள எரிவாயு விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக, கோவை -அவிநாசி சாலை லட்சுமி மில் பகுதியில் இயங்கி வரும் தனியாா் எரிவாயு உருளை ஏஜென்ஸி நிறுவன கிடங்கில் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அங்கு விதிகளை மீறி 1,000 வணிக பயன்பாட்டு எரிவாயு உருளைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி, இந்த எரிவாயு உருளைகளை நிா்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்தது ஏஜென்ஸி உரிமையாளா் காா்த்திக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, 1,000 எரிவாயு உருளைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். மேலும், விதிகளை மீறிய குற்றத்துக்காக ஏஜென்ஸி உரிமையாளா் காா்த்திக்கை போலீஸாா் கைது செய்தனா்.