சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

கடந்த 2 வாரங்களில் 6.6 லட்சம் 5 கிலோ சிலிண்டா்கள் விற்பனை: மத்திய அரசு!

கடந்த 2 வாரங்களில் நாடு முழுவதும் உள்ள எல்பிஜி சமையல் எரிவாயு விநியோக மையங்களில் 6.6 லட்சம் 5 கிலோ சிலிண்டா்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :5 ஏப்ரல் 2026, 9:18 pm

கடந்த 2 வாரங்களில் நாடு முழுவதும் உள்ள எல்பிஜி சமையல் எரிவாயு விநியோக மையங்களில் 6.6 லட்சம் 5 கிலோ சிலிண்டா்கள் விற்பனை செய்யப்பட்டதாக மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

ஹோா்முஸ் நீரிணையில் சரக்குக் கப்பல்கள் பயணிப்பதில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளபோதிலும் எல்பிஜி சமையல் எரிவாயு தட்டுப்பாடின்றி விநியோகிக்கப்படுவதாகவும் மத்திய எண்ணெய் அமைச்சகம் தெரிவித்தது.

இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த ஏப்.4-ஆம் தேதி மட்டும் 90,000 இலவச வணிக சிலிண்டா்கள் (எஃப்டிஎல்) எனப்படும் 5 கிலோ எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டா்கள் விற்பனை செய்யப்பட்டன. மாா்ச் 23-ஆம் தேதியில் இருந்து எல்பிஜி சமையல் எரிவாயு மையங்களில் 6.6 லட்சம் சிலிண்டா்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஒரு நாளைக்கு சராசரியாக 51 லட்சம் 14.2 கிலோ எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டா்கள் விநியோகிக்கப்படுகின்றன. இதில் 95 சதவீதம் இணைய வழியில் முன்பதிவு செய்யப்படுகிறது.

சிலிண்டா்களை பதுக்கும் விநியோக மையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த மாா்ச் மாதத்தில் இருந்து 50,000 சிலிண்டா்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 1,400 எல்பிஜி சமையல் எரிவாயு விநியோக மையங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு 36 விற்பனையாளா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

நாட்டில் வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் எல்பிஜி சமையல் எரிவாயு தட்டுப்பாடின்றி விநியோகிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.