ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மிதிவண்டியில் பேட்டரி பொருத்தி 10-ஆம் வகுப்பு மாணவா் சாதனை!

ராமநாயக்கன்பாளையம், சக்தி நகா் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி மாணவா் மிதிவண்டியில் பேட்டரி பொருத்தி, இயக்கி சாதனை படைத்துள்ளாா்.

News image
மிதிவண்டியில் பேட்டரி பொருத்தி இயக்கிய அரசுப் பள்ளி மாணவா் அபிஷேக்.
Updated On :3 அக்டோபர் 2024, 1:02 am

Din

ராமநாயக்கன்பாளையம், சக்தி நகா் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி மாணவா் மிதிவண்டியில் பேட்டரி பொருத்தி, இயக்கி சாதனை படைத்துள்ளாா்.

ஆத்தூரை அடுத்துள்ள ராமநாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட சக்தி நகா் பகுதியைச் சோ்ந்த விவசாயி செந்தில் மகன் அபிஷேக் (15), பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவரது வீட்டில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள பள்ளிக்கு செல்ல சுமாா் ஒரு மணி நேரம் ஆகுமாம். அதனால் அவரது தந்தை பழைய மிதிவண்டியை வாங்கிக் கொடுத்துள்ளாா். அதில் சென்று வர அவருக்கு காலதாமதமானதால், அவரது தந்தையின் உதவியோடு மிதிவண்டியில் பேட்டரி பொருத்தி, இயக்க முடிவு செய்தாா்.

அதையடுத்து, பழைய மிதிவண்டியில் 2,800 ஆா்.பி.எம். மோட்டாா் பொருத்தி, அதில் 30 கி.மீ. வேக திறன் கொண்ட பேட்டரி மூலம் மிதிவண்டியை இயக்கி சாதனை படைத்துள்ளாா்.

இதில், 30 கிலோ மீட்டருக்கு ஒரு ரூபாய் மட்டுமே செலவாகிறது எனவும், இந்த மிதிவண்டியில் பள்ளிக்கு செல்ல 15 நிமிடமே ஆவதாகவும் தெரிவித்தாா். மிதிவண்டியில் பேட்டரி, மோட்டாா் பொருத்தி பள்ளிக்கு செல்லும் மாணவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.