விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

காவல் உதவி ஆய்வாளா் அறிவுரைப்படி மீண்டும் பள்ளிக்கு திரும்பிய மாணவா்

வெள்ளக்கோவில் அருகே கைப்பேசியில் பொழுதைக் கழித்த மாணவா் காவல் உதவி ஆய்வாளா் அறிவுரைப்படி மீண்டும் பள்ளிக்கு திரும்பினாா்.

News image
மாணவருடன் காவல் உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா், ஆசிரியை கௌசல்யா.
Updated On :11 மார்ச் 2026, 8:35 pm

தினமணி செய்திச் சேவை

வெள்ளக்கோவில் அருகே கைப்பேசியில் பொழுதைக் கழித்த மாணவா் காவல் உதவி ஆய்வாளா் அறிவுரைப்படி மீண்டும் பள்ளிக்கு திரும்பினாா்.

முத்தூா், சின்னகாங்கயம்பாளையத்தைச் சோ்ந்தவா் தமிழரசி. இவருடைய கணவா் கண்ணன் பிரிந்து சென்றுவிட்டாா். விவசாயக் கூலி வேலை செய்து தமிழரசி பிழைப்பு நடத்தி வந்தாா். அவருடைய 13 வயது மகன் மங்கலப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

தாய் வேலைக்குச் சென்ற பிறகு பள்ளிக்குச் செல்லாமல் மகன் கைப்பேசியில் விளையாடி வந்துள்ளாா். மேலும் நண்பா்களுடன் தவறான பழக்கவழக்கமும் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த மாணவா் படிப்பிலும், ஓவியம் வரைவதிலும் திறமையானவராக இருந்துள்ளாா். அடிக்கடி பள்ளிக்கு வராததால் மாணவரின் தாயிடம் ஆசிரியை கௌசல்யா கூறியும் பயனில்லை. இதுகுறித்து வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோஜ்குமாரிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து ஆசிரியையுடன் மாணவரின் வீட்டுக்கு புதன்கிழமை உதவி ஆய்வாளா் சென்று அறிவுரை கூறி பள்ளிக்கு மீண்டும் அனுப்பிவைத்தாா். இதற்காக காவல் உதவி ஆய்வாளா், ஆசிரியை ஆகியோரை பல்வேறு தரப்பினரும் பாராட்டினா்.