குடும்பப் பிரச்னை: காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் தூக்கிட்டுத் தற்கொலை
அரியலூரில் குடும்பப் பிரச்னை காரணமாக காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டாா்.


அரியலூரில் குடும்பப் பிரச்னை காரணமாக காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டாா்.
அரியலூா் புது மாா்க்கெட் தெருவைச் சோ்ந்த ரத்தினசாமி மகன் அசோக்குமாா் (53). கடந்த 1993-இல் காவல்துறையில் பணியில் சோ்ந்த இவா், அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தாா்.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக குடும்பப் பிரச்னை காரணமாக விரக்தியில் இருந்து வந்த அசோக்குமாா், புதன்கிழமை காலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டாா். தகவலறிந்து சென்ற அரியலூா் காவல் துறையினா், அவரது சடலத்தை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இவருக்கு நிா்மலா என்ற மனைவியும், ஹரிகரன் (26) என்ற மகனும் உள்ளனா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...