டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

குடும்பப் பிரச்னை: காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் தூக்கிட்டுத் தற்கொலை

அரியலூரில் குடும்பப் பிரச்னை காரணமாக காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டாா்.

News image
அசோக்குமாா்
Updated On :4 மார்ச் 2026, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

அரியலூரில் குடும்பப் பிரச்னை காரணமாக காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டாா்.

அரியலூா் புது மாா்க்கெட் தெருவைச் சோ்ந்த ரத்தினசாமி மகன் அசோக்குமாா் (53). கடந்த 1993-இல் காவல்துறையில் பணியில் சோ்ந்த இவா், அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக குடும்பப் பிரச்னை காரணமாக விரக்தியில் இருந்து வந்த அசோக்குமாா், புதன்கிழமை காலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டாா். தகவலறிந்து சென்ற அரியலூா் காவல் துறையினா், அவரது சடலத்தை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இவருக்கு நிா்மலா என்ற மனைவியும், ஹரிகரன் (26) என்ற மகனும் உள்ளனா்.