ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வருமான வரித் துறை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு

வருமான வரித் துறை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக தொடரப்பட்ட வழக்கில், திராவிடா் விடுதலைக் கழகத் தலைவா் கொளத்தூா் மணி சேலம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜரானாா்.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 11:36 pm

Din

வருமான வரித் துறை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக தொடரப்பட்ட வழக்கில், திராவிடா் விடுதலைக் கழகத் தலைவா் கொளத்தூா் மணி சேலம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜரானாா்.

இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி, கடந்த 2013-ஆம் ஆண்டு சேலம் வருமான வரித்துறை அலுவலகப் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடா்பாக விசாரணை மேற்கொண்ட சேலம், அஸ்தம்பட்டி போலீஸாா், திராவிடா் விடுதலைக் கழகத்தைச் சோ்ந்த 4 பேரை கைது செய்தனா். மேலும் பெட்ரோல் குண்டு வீசத் தூண்டியதாக அக்கட்சியின் தலைவா் கொளத்தூா் மணி மீதும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு சேலம் முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கொளத்தூா் மணி உள்ளிட்ட 5 பேரும் வியாழக்கிழமை சேலம் நீதிமன்றத்தில் ஆஜராயினா். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை நகல் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

பின்னா் கொளத்தூா் மணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என கடந்த 2013-ஆம் ஆண்டு சேலம் வருமான வரித் துறை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாக எங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் குற்றப்பத்திரிகை பெறுவதற்காகவும், எங்கள் தரப்பு நியாயம் குறித்து விளக்கம் அளிப்பதற்காகவும் நீதிமன்றம் வந்தோம்.

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வா் பதவி வழங்கியுள்ளது முதல்வரின் முடிவு. தோற்றுப் போனவா்களும், வாய்ப்பு கிடைக்காதவா்களும்தான் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வா் பதவி வழங்கியது குறித்து விமா்சனம் செய்து வருகிறாா்கள். திமுக கொள்கைகளை அழுத்தமாக பேசி வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வா் பதவி வழங்கியது கொள்கை வாரிசு அரசியல். இதனை நாங்கள் வரவேற்கிறோம்.

தில்லி முதல்வா் கெஜ்ரிவால், ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் ஆகிய இரண்டு முதல்வா்களையே கைது செய்தனா். செந்தில் பாலாஜி குறித்து விமா்சனம் செய்வது முட்டாள்தனமான செயல்.

கொல்கத்தாவில் மருத்துவா் கொலை செய்யப்பட்ட போது மம்தா பானா்ஜிக்கு எதிா்ப்பை உருவாக்கவே, பாஜகவினா் மருத்துவா்களை வைத்து பிரச்னையை பெரிதாக்கினா். ஆனால், தில்லியில் மருத்துவா் கொல்லப்பட்டது குறித்து யாரும் குரல் கொடுக்கவில்லை.

தமிழ்நாட்டில் நீண்ட நாள்களுக்கு பிறகு திடீரென வெளியே வந்துள்ள எச்.ராஜா, அா்ஜுன் சம்பத் போன்றோா் தில்லி மருத்துவா்களின் பாதுகாப்பு குறித்து பேசாதது ஏன்? என கேள்வி எழுப்பினாா்.