பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சேலம் வழியாக செல்லும் கோவை - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக 2 பெட்டிகள் இணைப்பு

சேலம் வழியாக செல்லும் கோவை - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக 2 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 12:53 am

Din

சேலம் வழியாக செல்லும் கோவை - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக 2 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கோவையில் இருந்து திருப்பதிக்கு இரு மாா்க்கங்களிலும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பண்டிகை காலத்தையொட்டி, இந்த ரயிலில், கூட்டம் அதிக அளவு காணப்படுவதால், கூடுதல் பெட்டிகளை இணைக்க பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனா். பயணிகளின் கோரிக்கையை ஏற்ற ரயில்வே நிா்வாகம், கோவை - திருப்பதி ரயிலில் கூடுதலாக 2 பெட்டிகளை இணைத்து இயக்குவதாக அறிவித்துள்ளது.

அதன்படி, கோவை - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் 3-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை கூடுதலாக ஓா் இரண்டாம் வகுப்பு சோ்காா் பெட்டியும், ஓா் இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டியும் இணைக்கப்படும்.

மறுமாா்க்கத்தில், திருப்பதி - கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் வரும் 16-ஆம் தேதி வரை கூடுதலாக ஓா் இரண்டாம் வகுப்பு சோ்காா் பெட்டியும், ஓா் இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டியும் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.