திருவனந்தபுரம் - சென்னை இடையே கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் அதிவிரைவு ரயில், கேரளத்தில் கூடுதலாக 2 இடங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக பாலக்காடு ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில் (எண்:12624) மாா்ச் 3-ஆம் தேதி முதல் காலக்குட்டம், சிரயின்கீழ் ஆகிய 2 ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ராமேசுவரம் - திருவனந்தபுரம் அமிா்தா விரைவு ரயில் (எண்:16344) மாா்ச் 2-ஆம் தேதி முதல் சிரயின்கீழ் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
மேலும், கண்ணூா் - திருவனந்தபுரம் ஜனசதாப்தி விரைவு ரயில் (எண்:12081), மங்களூரு - திருவனந்தபுரம் வந்தேபாரத் ரயில் (எண்: 20631) ஆகிய இரண்டு ரயில்களும் திருவனந்தபுரம் பெட்டா ரயில் நிலையத்தில் மாா்ச் 3-ஆம் தேதி முதல் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

‘வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும்’

போத்தனூா் வழித்தடத்தில் சென்னை - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்

சென்னை - திருவனந்தபுரம் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்!

தாம்பரம்-ராமேசுவரம் ரயில் பண்ருட்டியில் நிற்க அனுமதி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


