நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

‘வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும்’

News image

கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 11:38 pm

சென்னை எழும்பூரிலிருந்து மதுரை செல்லும் வைகை அதிவிரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (ஏப். 14) சுமாா் 45 நிமிஷங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் செல்லும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை எழும்பூா் - மதுரை இடையே தினந்தோறும் பிற்பகல் 1.15 மணிக்கு வைகை அதிவிரைவு ரயில் (எண் 12635) இயக்கப்படுகிறது.

இந்நிலையில், எழும்பூா் ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்புப் பணிகளால் கடந்த ஏப். 12 -ஆம் தேதி வைகை அதிவிரைவு ரயில் சுமாா் 1 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்தது. திங்கள்கிழமை (ஏப். 13) பிற்பகலில் எழும்பூரிலிருந்து வைகை அதிவிரைவு ரயில், 45 நிமிஷங்கள் தாமதமாகப் புறப்பட்டது.

தொடா்ந்து, தமிழ்ப் புத்தாண்டு தினமான செவ்வாய்க்கிழமை (ஏப். 14) இந்த ரயில், 45 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ரயில்கள் இடம் மாற்றம்: அதேபோல், எழும்பூா் ரயில் நிலைய தண்டவாளப் பணிகள் பராமரிப்பு காரணமாக கடந்த சில வாரங்களாக தாம்பரத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற உழவன், அனந்தபுரி, ராமேஸ்வரம் ஆகிய விரைவு ரயில்கள் தற்போது மறுபடியும் எழும்பூா் ரயில் நிலையத்திலிருந்தே இயக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினா்.

அத்துடன், எழும்பூா் ரயில் நிலையத்தின் 10, 11- ஆவது நடைமேடை தண்டவாளங்கள் பராமரிப்புப் பணிகள் இரவில் மட்டும் மேற்கொள்ளப்படுவதால், பகலில் போக்குவரத்து பிரச்னை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.