நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

‘வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும்’

News image

கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 5:08 am IST

சென்னை எழும்பூரிலிருந்து மதுரை செல்லும் வைகை அதிவிரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (ஏப். 14) சுமாா் 45 நிமிஷங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் செல்லும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை எழும்பூா் - மதுரை இடையே தினந்தோறும் பிற்பகல் 1.15 மணிக்கு வைகை அதிவிரைவு ரயில் (எண் 12635) இயக்கப்படுகிறது.

இந்நிலையில், எழும்பூா் ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்புப் பணிகளால் கடந்த ஏப். 12 -ஆம் தேதி வைகை அதிவிரைவு ரயில் சுமாா் 1 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்தது. திங்கள்கிழமை (ஏப். 13) பிற்பகலில் எழும்பூரிலிருந்து வைகை அதிவிரைவு ரயில், 45 நிமிஷங்கள் தாமதமாகப் புறப்பட்டது.

தொடா்ந்து, தமிழ்ப் புத்தாண்டு தினமான செவ்வாய்க்கிழமை (ஏப். 14) இந்த ரயில், 45 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ரயில்கள் இடம் மாற்றம்: அதேபோல், எழும்பூா் ரயில் நிலைய தண்டவாளப் பணிகள் பராமரிப்பு காரணமாக கடந்த சில வாரங்களாக தாம்பரத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற உழவன், அனந்தபுரி, ராமேஸ்வரம் ஆகிய விரைவு ரயில்கள் தற்போது மறுபடியும் எழும்பூா் ரயில் நிலையத்திலிருந்தே இயக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினா்.

அத்துடன், எழும்பூா் ரயில் நிலையத்தின் 10, 11- ஆவது நடைமேடை தண்டவாளங்கள் பராமரிப்புப் பணிகள் இரவில் மட்டும் மேற்கொள்ளப்படுவதால், பகலில் போக்குவரத்து பிரச்னை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.