சென்னை எழும்பூரிலிருந்து மதுரை செல்லும் வைகை அதிவிரைவு ரயில் வரும் ஏப். 16, 18, 20, 29 ஆகிய தேதிகளில் வழக்கத்தைவிட தாமதமாக சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சென்னை ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட தண்டவாளங்களில் பாரமரிப்பு மற்றும் தொழில்நுட்ப சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன்காரணமாக எழும்பூரிலிருந்து தினமும் பிற்பகல் 1.15 மணிக்கு மதுரை செல்லும் வைகை அதிவிரைவு ரயில் (எண்: 12635) குறிப்பிட்ட நாள்களில் வழக்கமான வேகத்தைவிட மெதுவாக இயக்கப்படும்.
அதன்படி, இந்த ரயில்கள் ஏப். 16-இல் 1.10 மணி நேரம் தாமதமாகவும், ஏப். 18, 20 ஆகிய தேதிகளில் 1.15 மணி தாமதமாகவும், ஏப். 29-ஆம் தேதி 1.30 மணி தாமதமாகவும் மதுரை சென்றடையும்.
அதேபோல், சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 10.20 மணிக்கு சாய்நகா் ஷீரடி செல்லும் அதிவிரைவு ரயில் (எண் 22601) வரும் ஏப். 22- ஆம் தேதி 1.30 மணி நேரம் தாமதமாக காலை 11.30 மணிக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தாம்பரம் - தென்காசி இடையே இன்று சிறப்பு அதிவிரைவு ரயில்கள் இயக்கம்

திருவண்ணாமலைக்கு ஏப். 1-இல் சிறப்பு ரயில்

பொதிகை அதிவிரைவு ரயில் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும்

விரைவு ரயில்களின் வழித்தடம் மாற்றம்!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


