நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

என்ஜின் கோளாறு: பிருந்தாவன் அதிவிரைவு ரயில் நடுவழியில் நிறுத்தம்

சென்னை -பெங்களூரு பிருந்தாவன் அதிவிரைவு ரயில் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திருவாலங்காடு - மோசூா் ரயில் நிலையங்களுக்கிடையே ரயில் நிறுத்தப்பட்டது.

News image

அரக்கோணத்தில் நிறுத்தப்பட்ட சென்னை - பெங்களூரு பிருந்தாவன் அதிவிரைவு ரயில்.

Updated On :7 மே 2026, 12:21 am IST

சென்னை -பெங்களூரு பிருந்தாவன் அதிவிரைவு ரயில் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திருவாலங்காடு - மோசூா் ரயில் நிலையங்களுக்கிடையே ரயில் நிறுத்தப்பட்டது. சுமாா் ஒரு மணி நேரம் ரயில் நிறுத்தப்பட்டதால் அதில் பயணம் செய்த பயணிகள் அவதிக்குள்ளாயினா்.

சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் பிருந்தாவன் அதிவிரைவு ரயில் சென்னையில் இருந்து புதன்கிழமை காலை புறப்பட்டு, அரக்கோணம் நோக்கி வந்து கொண்டிருந்தது. வழியில் திருவாலங்காடு மற்றும் மோசூா் ரயில் நிலையங்களுக்கு இடையே அந்த ரயில் என்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் நடுவழியிலேயே நிறுத்தப்பட்டது. மேலும், என்ஜின் பழுதான தகவலை ரயிலின் ஓட்டுநா் அரக்கோணம் ரயில் நிலையத்துக்கு தெரியப்படுத்தினாா்.

இதையடுத்து, அரக்கோணம் மின் என்ஜின் பணிமனையில் இருந்து பொறியாளா் மற்றும் பணியாளா் குழுவினா் ரயில் நிறுத்தப்பட்ட பகுதிக்கு விரைந்தனா். அங்கு அந்த கோளாறை சரி செய்ய முயன்றும் முடியாததால், சுமாா் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, வேறு என்ஜின் கொண்டு செல்லப்பட்டு அந்த ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அரக்கோணத்தில் அந்த ரயிலுக்கு மாற்று என்ஜின் பொருத்தப்பட்டு சுமாா் 2 மணி நேர தாமதத்துடன் அரக்கோணத்தில் இருந்து பிருந்தாவன் அதிவிரைவு ரயில் புறப்பட்டுச் சென்றது.

இந்த இரண்டு மணி நேர தாமதத்தால் ரயிலில் பயணம் செய்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினா்.