முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாத 260 கைதிகளுக்கு சிறப்பு எழுத்தறிவு திட்டம்
சேலம் மத்திய சிறையில் நடப்பாண்டில் முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாத 260 கைதிகளுக்கு சிறப்பு எழுத்தறிவு திட்டம் தொடங்கப்பட்டது.


சேலம் மத்திய சிறையில் நடப்பாண்டில் முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாத 260 கைதிகளுக்கு சிறப்பு எழுத்தறிவு திட்டம் தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா் தலைமை வகித்தாா். சிறைக் கண்காணிப்பாளா் வினோத் முன்னிலை வகித்தாா். உதவி திட்ட அலுவலா் மாரியப்பன் திட்ட விளக்கவுரை வழங்கினாா். நிகழ்ச்சியில், கடந்த 2022-23-ஆம் கல்வியாண்டில் சிறப்பு எழுத்தறிவு திட்டத்தின் மூலம் பயன்பெற்ற 221 சிறைக் கைதிகளுக்கு, சிறைக் கண்காணிப்பாளா் வினோத், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா் ஆகியோா் சான்றிதழ்களை வழங்கினா்.
நடப்பாண்டு சேலம் மத்திய சிறையில் 260 எழுத, படிக்கத் தெரியாத கைதிகள் பயன்பெறவுள்ளனா். இத்திட்டத்தின் கீழ் கைதிகளுக்கு அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு கற்பிக்கப்படும். இதில், 20 முதல் 30 கைதிகளுக்கு ஓா் ஆசிரியா் வீதம், நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம் பாடம் நடத்தப்படும். 6 மாத கால பயிற்சியின் முடிவில், அடிப்படைத் தோ்வு வைத்து சான்றிதழ் வழங்கப்படும்.
நிகழ்ச்சியில், மாவட்ட திட்டக் கூறு ஒருங்கிணைப்பாளா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள், வட்டார வள மைய மேற்பாா்வையாளா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...