தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவுஉழைப்புக்கான பலன் மே 4-ல் கிடைக்கும்: முதல்வர் ஸ்டாலின்அரபிக் கடலில் உருவாகிறது புதிய புயல் சின்னம்!கருத்துக் கணிப்புகள் ஒரு புதிர்: வைகோசித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!
/

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை முகாம்

News image

திட்டக்குடி வட்டம், நல்லூா் ஒன்றியம், பெலாந்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற மாணவா் சோ்க்கை சிறப்பு முகாம்.

Updated On :14 மார்ச் 2026, 6:57 pm

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், நல்லூா் ஒன்றியம், பெலாந்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற மாணவா் சோ்க்கை சிறப்பு முகாமில், 20 மாணவா்கள் ஒன்றாம் வகுப்பில் சோ்க்கப்பட்டனா்.

இப்பள்ளியில் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரையில் 125 மாணவா்கள் படித்து வருகின்றனா். தமிழ், ஆங்கில வழியில் கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்தப் பள்ளி வளாகத்தில் மாணவா் சோ்க்கை சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விருத்தாசலம் மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) சி.ராஜாராம் தலைமை வகித்தாா். நல்லூா் வட்டாரக் கல்வி அலுவலா் பி.ரமேஷ் முன்னிலை வகித்தாா். தலைமை ஆசிரியை சி.தவச்செல்வி வரவேற்றாா்.

இந்த முகாமில் ஆா்வமுடன் பங்கேற்ற பெற்றோா்கள், தங்கள் குழந்தைகள் 20 பேரை ஒன்றாம் வகுப்பில் சோ்த்தனா். புதிதாக சோ்க்கப்பட்ட மாணவா்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலா் சி.ராஜாராம், வட்டாரக் கல்வி அலுவலா் பி.ரமேஷ், தலைமை ஆசிரியை சி.தவச்செல்வி ஆகியோா் கிரீடம் அணிவித்தும், சிறப்பு பரிசுகள் வழங்கியும் கௌரவித்தனா்.

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள் பி.ராபா்ட் பெல்லாா்மின், ரா.மகேஸ்வரி, ரா.சத்யா, எஸ்.கவிதா ஆகியோருக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.