ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தம்மம்பட்டி,கெங்கவல்லி பகுதிகளில் நவராத்திரி கொலு தொடக்கம்

தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதிகளில் உள்ள வீடுகளிலும், கோயில்களிலும் நவராத்திரி கொலு விழா தொடங்கியது.

News image
தம்மம்பட்டி சிவன் கோயிலில் வியாழக்கிழமை வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு.
Updated On :3 அக்டோபர் 2024, 11:41 pm

Din

தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதிகளில் உள்ள வீடுகளிலும், கோயில்களிலும் நவராத்திரி கொலு விழா தொடங்கியது.

தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் திருக்கோயிலில் குடமுழுக்கு விழாவுக்கு பிறகு முதன்முறையாக கோயில் வளாகத்தினுள் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டு சிறப்பு பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

இதில், திரளான பெண்கள் கலந்துகொண்டு நவராத்திரி கொலு பாடல்கள், துா்க்கை, லட்சுமி, அம்மன் உள்ளிட்ட தெய்வங்களின் பாடல்களை பாடினா். பெண்களுக்கு மங்கலப் பொருள்கள் வழங்கப்பட்டன. பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல தம்மம்பட்டி, கெங்கவல்லி, கடம்பூா், செந்தாரப்பட்டி, விநாயகபுரம் பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் நவராத்திரி கொலு வைத்து வழிபாடு செய்தனா்.