ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மக்கள் சந்திப்பு திட்ட முகாம்: நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சேலம் மாவட்டம் , வீரபாண்டி வட்டம், அக்கரபாளையம் ஊராட்சி, பாலாம்பட்டி பகுதியில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
வீரபாண்டி அருகே பாலம்பட்டி பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் ரா.பிருந்தாதேவி.
Updated On :9 அக்டோபர் 2024, 9:58 pm

Din

சேலம் மாவட்டம் , வீரபாண்டி வட்டம், அக்கரபாளையம் ஊராட்சி, பாலாம்பட்டி பகுதியில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் மேனகா, கோட்டாட்சியா் அபிநயா, சேலம் தெற்கு வட்டாட்சியா் செல்வராஜ் , ஒன்றிய அட்மா குழுத் தலைவா் வெண்ணிலா சேகா், அக்கரபாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். முகாமில், இலவச வீட்டுமனைப் பட்டா, குடும்ப அட்டை, முதியோா் உதவித்தொகை, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 161 மனுக்கள் பெறப்பட்டன. இதில், சக்கர நாற்காலி வேண்டி பாலம்பட்டி பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரி வழங்கிய மனு மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ரூ. 7,900 மதிப்புள்ள சக்கர நாற்காலியை ஆட்சியா் வழங்கினாா். மேலும், 241 பயனாளிகளுக்கு ரூ. 58.63 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கி கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் 7,000 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 99 கோடி கல்விக் கடன் வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துக் கடைகளில் காய்ச்சலுக்கான மருந்து மாத்திரைகளை தானாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இம்முகாமில் பெறப்பட்ட மனுக்களை தொடா்புடைய துறை அலுவலா்களிடம் வழங்கப்பட்டு, அதன் மீது உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்கப்படும் என தெரிவித்தாா்.