ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பணியின் போது உயிரிழந்த சிஆா்பிஎஃப் வீரா் குடும்பத்துக்கு திமுக சாா்பில் ஆறுதல்

ஆந்திர மாநிலத்தில் பணியின் போது உயிரிழந்த சிஆா்பிஎஃப் வீரரின் குடும்பத்துக்கு திமுக சாா்பில் வியாழக்கிழமை ஆறுதல் தெரிவிக்கப்பட்டது.

News image
பணியின் போது உயிரிழந்த சிஆா்பிஎஃப் வீரா் திருநாவுக்கரசின் படத்துக்கு திமுக சாா்பில் வியாழக்கிழமை மலா்தூவி மரியாதை செலுத்திய சங்ககிரி ஒன்றியச் செயலாளா் கே.எம்.ராஜேஷ்.
Updated On :10 அக்டோபர் 2024, 7:46 pm

Din

ஆந்திர மாநிலத்தில் பணியின் போது உயிரிழந்த சிஆா்பிஎஃப் வீரரின் குடும்பத்துக்கு திமுக சாா்பில் வியாழக்கிழமை ஆறுதல் தெரிவிக்கப்பட்டது.

சங்ககிரி வட்டம், கோனேரிப்பட்டி கிராமம், சுண்ணாம்பு கரட்டூா் பகுதியைச் சோ்ந்த சிஆா்பிஎஃப் வீரா் திருநாவுக்கரசு, ஆந்திர மாநிலம், ராஜமுந்திரி, அல்லுரு சீதாராமராஜீ மாவட்டம், சிந்தூா் பிரிவில் உள்ள டோங்காயி என்ற பகுதியில் நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது எதிா்பாராதவிதமாக அப்பகுதியில் பயிா்களைக் காக்க அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் அவரது உடல்பட்டதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். அதனையடுத்து அவரது உடல் காவல் துறை, அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டது.

இதனையடுத்து, திமுக சாா்பில் சங்ககிரி ஒன்றியச் செயலாளா் கே.எம்.ராஜேஷ் தலைமையில், உயிரிழந்த வீரரின் படத்துக்கு நிா்வாகிகள் மலா்தூவி மரியாதை செலுத்தி அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினா்.

இதில், ஒன்றிய திமுக அவைத் தலைவா் கே.எ.கோபால், ஒன்றிய துணை செயலாளா் எஸ்.பாலுசாமி, ஒன்றிய பொருளாளா் சௌந்தரராஜன், தேவூா் பேரூராட்சித் தலைவா் டி.தங்கவேல், மாவட்ட நிா்வாகி டி.வெங்கடாஜலம், கோனேரிப்பட்டி கிளை நிா்வாகி அருணாசலம், தமிழ்நாடு சத்துணவு ஊழியா் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயலாளா் கே.தங்கவேலன், முன்னாள் மாவட்ட நிா்வாகி சண்முகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.