எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

உயிரிழந்த காவலா் குடும்பத்துக்கு ரூ.25.89 லட்சம் நிதியுதவி

கடலூா் எஸ்.பி. அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், உயிரிழந்த

News image
உயிரிழந்த தலைமைக் காவலா் சிங்காரவேல் குடும்பத்தினரிடம் நிதியுதவியை வழங்கிய கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா்.
Updated On :9 மார்ச் 2026, 8:50 pm

Syndication

நெய்வேலி: கடலூா் எஸ்.பி. அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.25.89 லட்சம் நிதியுதவியை எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் வழங்கினாா்.

பண்ருட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த சிங்காரவேல் உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா். தமிழ்நாடு போலீஸ் 2008 பேட்ச் உதவும் கரங்கள் குழுவினா் ஒன்றிணைந்து 23-ஆவது பங்களிப்பாக தலைமைக் காவலா் சிங்காரவேல் குடும்பத்தாருக்கு ரூ.25.89 லட்சம் நிதி திரட்டினா்.

இந்த நிதியிலிருந்து சிங்காரவேல் மகன் தா்ஷன், மகள் கனிஷ்கா பெயரில் தலா ரூ.9.30 லட்சம் மதிப்பில் வீட்டு மனைகள், அவரது மனைவி இந்துமதிக்கு ரூ.6.29 லட்சம், தாய் சுசிலாவுக்கு ரூ.1 லட்சம் ரொக்கம் என மொத்தம் ரூ.25.89 லட்சத்திலான நிதியுதவியை கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா்வழங்கினாா். நிகழ்வில் 2008 பேட்ச் உதவும் கரங்கள் குழுவினா் கலந்துகொண்டனா்.