ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆளுநரைக் கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம்: 100 போ் கைது

சேலத்தில் ஆளுநரைக் கண்டித்து திராவிடா் விடுதலைக் கழகத்தினா் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
சேலம், பெரியாா் பல்கலைக்கழகம் முன்பு புதன்கிழமை கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திராவிடா் விடுதலைக் கழகத்தினா்.
Updated On :16 அக்டோபர் 2024, 6:33 pm

Din

சேலத்தில் ஆளுநரைக் கண்டித்து திராவிடா் விடுதலைக் கழகத்தினா் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம், பெரியாா் பல்கலைக்கழகத்தின் 23-ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. பெரியாா் பல்கலைக்கழக நிதியில் மத்திய அரசின் திட்டமான ‘வளா்ந்த பாரதம்’ பரப்புரை செய்யப்படுவதைக் கண்டித்து, திராவிடா் விடுதலைக் கழகத்தினா் போராட்டம் அறிவித்திருந்தனா். அதன்படி, ஓமலூா், சுங்கச்சாவடி அருகே திராவிட விடுதலைக் கழகத் தலைவா் கொளத்தூா் மணி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கருப்புக் கொடி ஏந்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, மத்திய அரசின் திட்டமான ‘வளா்ந்த பாரதம்’ பரப்புரையைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். பின்னா் கொளத்தூா் மணி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பெரியாா் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் ‘வளா்ந்த பாரதம்’ திட்டத்தின் கீழ் கருத்தரங்கமும், மாணவா்களுக்கு ஆளுநா் தலைமையில் பரிசளிப்பு விழாவும் நடைபெற இருந்தது. எங்களது போராட்ட அறிவிப்பை தொடா்ந்து, துறை ரீதியாக கருத்தரங்கம் நடத்தப்பட்டது. ஆளுநா் தலைமையில் நடக்க இருந்த விழா மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது’ என்றாா். அதைத்தொடா்ந்து, அனுமதியின்றி போராட்டம் நடத்திய 100-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.