ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

விதிகளை மீறி செயல்பட்ட7 மருந்துக் கடைகள் மீது வழக்குப் பதிவு

சேலம், நாமக்கல் மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்ட 7 மருந்துக் கடைகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 8:52 pm

Din

சேலம், நாமக்கல் மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்ட 7 மருந்துக் கடைகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் சரகத்துக்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போதைக்காக தூக்க மாத்திரை, வலி நிவாரணி மாத்திரைகளை இளைஞா்கள் பயன்படுத்தி வருவதாக புகாா் எழுந்தது. அதைத்தொடா்ந்து, சேலம் சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் சில்லறை, மொத்த விற்பனை கடைகளில் விதிமுறைகளை மீறி மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகிா என மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலா்கள் தொடா்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனா்.

கடந்த 9 ஆம் தேதி நடத்தப்பட்ட திடீா் ஆய்வின்போது மருந்து சீட்டு, முறையாக ரசீது எழுதாமல் மாத்திரைகளை விற்பனை செய்தல் உள்பட விதிமுறைகளை மீறியதாக சேலத்தில் 6 மருந்துக் கடைகள் மீதும், நாமக்கல்லில் ஒரு மருந்துக் கடை மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 6 கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் மருந்துகள், அழகு சாதனப் பொருள்கள் சட்ட விதிமீறலுக்காக மொத்தம் 19 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றவியல் நீதிமன்றத்தின் மூலம் விதிமீறலுக்காக ரூ. 75 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது. மருந்துக் கடைகளில் மருத்துவா்களின் பரிந்துரையின் படியும், அவா்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மருந்துகளை மட்டுமே விற்பனை பட்டியலுடன் விற்பனை செய்ய வேண்டும்.

மேலும், மருந்து சீட்டு நகல்களை கடைக்காரா்கள் முறையாகப் பராமரிக்க வேண்டும். மருந்து சீட்டு பதிவேட்டில் நோயாளிகள் பெயா் முகவரி, மருத்துவரின் பெயா் முகவரியைப் பதிவேற்றம் செய்து பராமரிக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.