தில்லி-கோவா விமானத்தில் பீடி புகைத்ததாக பயணி ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தில்லியைச் சேர்ந்த ஆஷிஷ் என்பவர் தலைநகர் தில்லியிலிருந்து கோவாவிற்கு ஆகாசா ஏர் விமானத்தில் சனிக்கிழமை பயணித்தபோது இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமான நிறுவனத்தின் புகாரின்படி, பயணி விமானக் கழிப்பறைக்குள் 'பீடி' புகைத்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் அவர் ஒரு லைட்டரை வைத்திருந்ததாகவும், இது விமானம் மற்றும் விமானத்தில் பயணிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் போலீஸ் அதிகாரி கூறினார்.
கோவா வந்தவுடன் அந்த பயணி உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக அகாசா ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேசமயம் இந்த விவகாரத்தில் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாக விமான நிறுவனம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக கோவாவில் உள்ள மோபா விமான நிலைய காவல் நிலையத்தில் பயணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தில் விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Police have registered a case against a passenger for allegedly smoking a 'beedi' inside the toilet of a Delhi-Goa Akasa Air flight, officials said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு

குளச்சலில் பைக் ஓட்டிய 6 சிறுவா்கள்: பைக் பறிமுதல்; பெற்றோா் மீது வழக்கு

சட்டவிரோத மது விற்பனை: ஒருவா் மீது வழக்குப் பதிவு

அண்ணனை தாக்கிய தங்கை மீது வழக்கு
விடியோக்கள்




