தில்லி-கோவா விமானத்தில் பீடி புகைத்ததாக பயணி ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தில்லியைச் சேர்ந்த ஆஷிஷ் என்பவர் தலைநகர் தில்லியிலிருந்து கோவாவிற்கு ஆகாசா ஏர் விமானத்தில் சனிக்கிழமை பயணித்தபோது இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமான நிறுவனத்தின் புகாரின்படி, பயணி விமானக் கழிப்பறைக்குள் 'பீடி' புகைத்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் அவர் ஒரு லைட்டரை வைத்திருந்ததாகவும், இது விமானம் மற்றும் விமானத்தில் பயணிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் போலீஸ் அதிகாரி கூறினார்.
கோவா வந்தவுடன் அந்த பயணி உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக அகாசா ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேசமயம் இந்த விவகாரத்தில் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாக விமான நிறுவனம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக கோவாவில் உள்ள மோபா விமான நிலைய காவல் நிலையத்தில் பயணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தில் விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Police have registered a case against a passenger for allegedly smoking a 'beedi' inside the toilet of a Delhi-Goa Akasa Air flight, officials said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.4.5 லட்சம் மோசடி; இளைஞா் மீது வழக்குப் பதிவு

சிபிஎஸ்இ இணையதளம் மீது சைபா் தாக்குதல்: தில்லி காவல் துறை வழக்குப் பதிவு

பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தை வெளியிட்டதாக செளரப் பரத்வாஜ் மீது வழக்குப் பதிவு

சிறுமிக்கு பாலியல் தொல்லை: மின்ஊழியா் மீது போக்ஸோவில் வழக்குப் பதிவு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |




