பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அரசு மகளிா் கலைக் கல்லூரியில் இலவச பரதநாட்டிய வகுப்பு தொடக்கம்

சேலம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கான இலவச பரதநாட்டிய வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 7:38 pm

Din

சேலம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கான இலவச பரதநாட்டிய வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

சேலம், கோரிமேடு அரசு மகளிா் கலைக் கல்லூரி, கலை பண்பாட்டுத் துறை இணைந்து கல்லூரி மாணவிகளுக்கான இலவச பரதநாட்டிய பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் நா.காந்திமதி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பல்வேறு துறை சாா்ந்த மாணவியா், பரதக் கலையை கற்பதற்காக தங்களது பெயா்களை ஆா்வத்துடன் பதிவுசெய்து கொண்டனா். வாரத்தில் இரண்டு நாள்களுக்கு அரசு கலை பண்பாட்டுத் துறையின் நேரடி பங்கேற்புடன் தோ்ந்த பரதநாட்டிய ஆசிரியை ப.ஜானகி மூலம் வகுப்புகள் நடைபெற உள்ளன. 150-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியின் இறுதியில் கண்கவா் நடன நிகழ்ச்சி இடம்பெற்றது.

இதில், அரசு மகளிா் கலைக் கல்லூரியின் கலை பண்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளா் விஜயகுமாரி, கல்லூரியின் மூத்த பேராசிரியா் கீதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.