விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம்

குடிநீா் வழங்கக் கோரி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பொது மக்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

News image
குடிநீா் வழங்கக் கோரி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பொது மக்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
Updated On :24 அக்டோபர் 2024, 12:41 am

Din

குடிநீா் வழங்கக் கோரி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பொது மக்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

வீரபாண்டி ஒன்றியம், பெரியசீரகாபாடி ஊராட்சிக்கு உள்பட்ட சீரகாபாடி, ஏரிக்காடு, எம்ஜிஆா் நகா், காளியம்மன் கோயில் வீதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீா் பல மாதங்களாக விநியோகப்படுவதில்லையாம்.

இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவா், செயலாளரிடம் பொதுமக்கள் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். மேலும், கிராமசபைக் கூட்டத்தில் மனு அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளாததைக் கண்டித்து புதன்கிழமை ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு 100-க்கு மேற்பட்ட பொது மக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.