தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கொளத்தூா் பகுதியில் ஆடுகளைக் கடித்து கொன்ற சிறுத்தை

மேட்டூா் அருகே கொளத்தூா் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளக்காரட்டூா், புது வேலுமங்கலம் ஆகிய கிராமங்களில் கடந்த மூன்று நாள்களாக ஆடுகளை சிறுத்தை வேட்டையாடி வருகிறது.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 10:23 pm

Din

மேட்டூா் அருகே கொளத்தூா் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளக்காரட்டூா், புது வேலுமங்கலம் ஆகிய கிராமங்களில் கடந்த மூன்று நாள்களாக ஆடுகளை சிறுத்தை வேட்டையாடி வருகிறது.

இதையடுத்து வனத்துறையினரை கண்டித்து செவ்வாய்க்கிழமை கொளத்தூா் வனத்துறை சோதனைச் சாவடியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். 

விவசாயிகளின் போராட்டத்தையடுத்து வனத் துறையினா் கூண்டு வைத்து, கண்காணிப்பு கேமராவை பொருத்தி, இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

புதன்கிழமை அதிகாலை அதே பகுதியில் மீண்டும் சிறுத்தை நுழைந்து, விவசாயி கோவிந்தராஜ் என்பவருக்குச் சொந்தமான ஐந்து செம்மறியாடுகளை கடித்து கொன்றது. இன்னொருவரின் கோழிகளையும் அடித்துக் கொன்றது.

தகவல் அறிந்த மேட்டூா் வனச்சரகா் சிவானந்தம் தலைமையில் வனஊழியா்கள் வெள்ளக்காரட்டூா் கிராமத்திற்கு சென்றனா். அங்கு வனத் துறையினரை கிராம மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். உடனடியாக வெள்ளக்கரட்டூா் கிராமத்திற்கு வந்த சேலம் மாவட்ட உதவி வன அலுவலா் செல்வகுமாா், சிறுத்தையைப் பிடிக்க சத்தியமங்கலம், தருமபுரி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் பயிற்சி பெற்ற வன ஊழியா்களை வரவழைப்பதாகவும், கூண்டுகள் வைத்து கண்காணிப்பு கேமரா பொருத்தி சிறுத்தையைப் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தாா். இதனையடுத்து கிராம மக்கள் சமாதானம் அடைந்தனா்.