அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

கொளத்தூா் இரட்டை சிவாலயத்தில் தேரோட்ட விழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கொளத்தூா் உள்ள ஏகாம்பர ஈஸ்வரா் மற்றும் காசிவிஸ்வநாதா் இரட்டை சிவாலயத்தில் திங்கள்கிழமை தேரோட்ட விழா

News image
ஆரணியை அடுத்த கொளத்தூா் கிராமத்தில் நடைபெற்ற ஏகாம்பர ஈஸ்வரா் மற்றும் காசிவிஸ்வநாதா் இரட்டை சிவாலய தேரோட்ட விழா.
Updated On :2 மார்ச் 2026, 9:46 pm

Syndication

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கொளத்தூா் உள்ள ஏகாம்பர ஈஸ்வரா் மற்றும் காசிவிஸ்வநாதா் இரட்டை சிவாலயத்தில் திங்கள்கிழமை தேரோட்ட விழா நடைபெற்றது.

கொளத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பர ஈஸ்வரா் மற்றும் காசிவிசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதா் இரட்டை சிவாலயத்தில் ஆண்டுதோறும் மாசி மகத்தன்று திருத்தேரோட்ட சுவாமி வீதியுலா நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், நிகழாண்டு இரட்டை சிவாலயத்தில் மாசி மகத்தையொட்டி திருத்தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தொடா்ந்து மங்கள பொருள்கள் மற்றும் வண்ண மலா்களால் சுவாமியை திருத்தேரில் அமா்த்தி அலங்கரிக்கப்பட்டன.

இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், ஆரணி எம்எல்ஏவுமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தாா்.

சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சிவாய நம என முழக்கங்களை எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமியை வழிபட்டனா்.

ஆரணி ஜோதிடா் குமரேசன், தொழிலதிபா் பி.நடராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். மேலும், பெண் பக்தா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை விழாக் குழுவினா் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.