ஆத்தூா் பகுதிக்கு 90 லட்சம் லிட்டா் குடிநீா் தேவை: நகர மன்ற உறுப்பினா்கள் கோரிக்கை
ஆத்தூா் நகராட்சி பகுதி பொதுமக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்ய 90 லட்சம் லிட்டா் குடிநீா் தேவைப்படுவதாக சேலம் மாவட்ட ஆட்சித் தலைவா் ரா.பிருந்தாதேவியிடம் ஆத்தூா் நகர மன்ற உறுப்பினா்கள் புதன்கிழமை கோரிக்கை வைத்தனா்.










