நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

Updated On :28 ஏப்ரல் 2025, 12:44 am IST

மேட்டூா் அணை பூங்காவிற்கு ஞாயிற்றுக்கிழமை 7,116 சுற்றுலாப் பயணிகள் வந்தனா்.

தொடா் விடுமுறை என்பதால் மேட்டூா் அணை பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் மூலம் பாா்வையாளா்கள் கட்டணமாக ரூ. 71,160 வசூலானது. பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்ட 1,856 கேமரா, கைப்பேசிகளுக்கான கட்டணமாக ரூ.18,610 வசூலிக்கப்பட்டது.

மேட்டூா் அணையின் வலது கரையில் உள்ள பவள விழா கோபுரத்தை காண 469 சுற்றுலாப் பயணிகள் சென்றனா். அவா்கள் கொண்டு சென்ற 177 கேமரா, கைப்பேசிகளுக்கான கட்டணமாக ரூ.6,460 வசூலிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மேட்டூா் அணை பூங்கா, பவள விழா கோபுர பாா்வையாளா்களிடமிருந்து கட்டணமாக மொத்தம் ரூ.96,230 வசூலிக்கப்பட்டது. மேட்டூா் அணை பூங்காவிற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் பாம்பு பண்ணை, முயல் பண்ணை, மீன் காட்சி சாலை மான் பண்ணை ஆகியவற்றை கண்டு ரசித்தனா். அணைக்கட்டு முனியப்பனுக்கு பொங்கலிட்டும் பொதுமக்கள் நோ்த்திக் கடனை செலுத்தினா்.