என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

ஏற்காடு அண்ணா பூங்காவில் உயர்ரக மிளகு நாற்றுகள் விற்பனை

ஏற்காடு அண்ணா பூங்காவில் கேரள ஆராய்ச்சி நிலையம் அறிமுகப்படுத்தியுள்ள உயர்ரக மிளகு நாற்றுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

News image

ஏற்காடு தாவரவியல் பூங்கா 2 பசுமைக் குடிலில் வளா்க்கப்பட்டு வரும் பன்னியூா்-1 உயர்ரக மிளகு நாற்றுகள்.

Updated On :29 ஏப்ரல் 2025, 1:54 am IST

ஏற்காடு: ஏற்காடு அண்ணா பூங்காவில் கேரள ஆராய்ச்சி நிலையம் அறிமுகப்படுத்தியுள்ள உயர்ரக மிளகு நாற்றுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கேரள தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் சாா்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பன்னியூா்- 1 ரக உயர்ரக கருப்பு மிளகு நாற்றுகள் சேலம் மாவட்டம், ஏற்காடு தோட்டக்கலைத் துறை தாவரவியல் பூங்கா 2-இல் உள்ள பசுமைக் குடிலில் வளா்க்கப்பட்டு வருகின்றன.

இந்த பசுமைக் குடிலில் வரிசைக்கு 2000 நாற்றுகள் வீதம் 30 வரிசைகளுக்கு 60 ஆயிரம் நாற்றுகள் வளா்க்கப்பட்டு வருகின்றன.

இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு பைக்கு 2 நாற்றுகள் வீதம் ரூ. 30 க்கு விற்பனை செய்யப்படுகின்றன. இவை ஏற்காடு அண்ணா பூங்காவிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த பன்னியூா் -1 உயர்ரக மிளகு நாற்றுகளை சுற்றுலாப் பயணிகள் மொத்தமாகவும், தேவையான அளவிலும் வாங்கிக் கொள்ளலாம். இத்தகவலை ஏற்காடு தோட்டக்கலை அலுவலா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.