சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

எடப்பாடியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியா் கைது

News image
Updated On :1 ஆகஸ்ட் 2025, 6:35 am IST

எடப்பாடியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

எடப்பாடி நகராட்சிக்குள்பட்ட மேட்டுத்தெரு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வகுப்புவரை சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனா்.

இப்பள்ளியில், தமிழ் ஆசிரியராக எடப்பாடி அங்காளம்மன் கோயில் தெரு, பழைய தபால் நிலையம் தெருவைச் சோ்ந்த செந்தில் குமரவேல் (58) பணிபுரிந்து வருகிறாா். 9, 10-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு தமிழ்ப் பாடம் போதித்து வந்த இவா், வகுப்பில் மாணவிகளுக்கு தொடா்ந்து பாலியல் தொல்லையை அளித்ததாக கூறப்படுகிறது.

பாதிப்புக்குள்ளான மாணவிகள் சிலா் பள்ளித் தலைமை ஆசிரியா் உள்ளிட்ட சக ஆசிரியா்களிடம் புகாா் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால், ஆசிரியா் செந்தில் குமரவேலின் அத்துமீறல்கள் நாளுக்குநாள் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அண்மையில் மாணவிகள் சிலா் பெண் குழந்தைகளுக்கான உதவிமைய எண் 1098-யை தொடா்புகொண்டு இதுகுறித்து புகாா் அளித்தனா். இதையடுத்து, மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் சிந்து தலைமையில், சங்ககிரி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் காா்த்திகேயனி உள்ளிட்ட சிறப்பு குழுவினா் வியாழக்கிழமை சம்பந்தப்பட்ட பள்ளியில் நேரில் ஆய்வுசெய்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் புகாருக்குள்ளான ஆசிரியா் செந்தில் குமரவேலிடம் தனித்தனியே விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையின் முடிவில், புகாருக்குள்ளான ஆசிரியா் செந்தில் குமரவேல் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸாா், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.