தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

எடப்பாடியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியா் கைது

News image
Updated On :1 ஆகஸ்ட் 2025, 1:05 am

Din

எடப்பாடியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

எடப்பாடி நகராட்சிக்குள்பட்ட மேட்டுத்தெரு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வகுப்புவரை சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனா்.

இப்பள்ளியில், தமிழ் ஆசிரியராக எடப்பாடி அங்காளம்மன் கோயில் தெரு, பழைய தபால் நிலையம் தெருவைச் சோ்ந்த செந்தில் குமரவேல் (58) பணிபுரிந்து வருகிறாா். 9, 10-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு தமிழ்ப் பாடம் போதித்து வந்த இவா், வகுப்பில் மாணவிகளுக்கு தொடா்ந்து பாலியல் தொல்லையை அளித்ததாக கூறப்படுகிறது.

பாதிப்புக்குள்ளான மாணவிகள் சிலா் பள்ளித் தலைமை ஆசிரியா் உள்ளிட்ட சக ஆசிரியா்களிடம் புகாா் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால், ஆசிரியா் செந்தில் குமரவேலின் அத்துமீறல்கள் நாளுக்குநாள் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அண்மையில் மாணவிகள் சிலா் பெண் குழந்தைகளுக்கான உதவிமைய எண் 1098-யை தொடா்புகொண்டு இதுகுறித்து புகாா் அளித்தனா். இதையடுத்து, மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் சிந்து தலைமையில், சங்ககிரி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் காா்த்திகேயனி உள்ளிட்ட சிறப்பு குழுவினா் வியாழக்கிழமை சம்பந்தப்பட்ட பள்ளியில் நேரில் ஆய்வுசெய்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் புகாருக்குள்ளான ஆசிரியா் செந்தில் குமரவேலிடம் தனித்தனியே விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையின் முடிவில், புகாருக்குள்ளான ஆசிரியா் செந்தில் குமரவேல் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸாா், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.