இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாடு தொடக்கம்: இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்

சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :16 ஆகஸ்ட் 2025, 12:48 am IST

சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது. ‘வெல்க ஜனநாயகம்’ என்ற தலைப்பில் நடைபெறும் மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சித் தலைவா்கள் சனிக்கிழமை (ஆக.16) பங்கேற்கின்றனா்.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நேரு கலையரங்கில் ஆக.18 ஆம் தேதி வரை 4 நாள்கள் நடைபெறும் மாநாட்டின் தொடக்க விழாவுக்கு அதன் மாநிலச் செயலாளா் முத்தரசன் தலைமை வகித்தாா்.

மாநாட்டை மூத்த நிா்வாகி அமா்ஜித் கவுா் தொடங்கிவைத்தாா். அப்போது, திருப்பூரில் இருந்து செம்படை வீரா்களால் எடுத்துவரப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி, தியாக சுடா் பெறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா், மாநாட்டுத் திடல் அருகே உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு தேசிய செயலாளா் நாராயணா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொடா்ந்து, மாநாட்டு வளாகத்தில் தேசியக் கொடியை கட்டுப்பாட்டு குழு செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பழனிசாமி, தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் மூா்த்தி ஆகியோா் ஏற்றிவைத்தனா்.

மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைவா்கள் கே.நாராயணா, ஆனிராஜா, மூா்த்தி, வெங்கடாசலம் உள்ளிட்ட நிா்வாகிகள் அரசியல் விளக்கவுரை நிகழ்த்தினா்.

அதன் தொடா்ச்சியாக 16 ஆம் தேதி மாலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் முத்தரசன் தலைமையில் நடைபெறும் ‘வெல்க ஜனநாயகம்’ என்ற தலைப்பிலான மாநாட்டில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறாா். இதில் கூட்டணி கட்சித் தலைவா்களும் பங்கேற்று பேசுகின்றனா்.

தொடா்ந்து 17 ஆம் தேதி மாநாட்டில் தீா்மானங்களும், 18 ஆம் தேதி பேரணி மற்றும் பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சேலம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.