உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

"ஒன்றுபடுவோம், நல்லதை செய்வோம்': டி. ராஜாவிடம் முதல்வர் விஜய் உறுதி

"தமிழக மக்களின் நலன்களுக்காக ஒன்றுபட்டு பயணிப்போம், நல்லதை செய்வோம்' என்று தில்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலர் டி.ராஜாவிடம் பேசியபோது முதல்வர் ஜோசப் விஜய் உறுதியளித்தார்.

News image
Updated On :11 ஜூன் 2026, 4:50 am IST

"தமிழக மக்களின் நலன்களுக்காக ஒன்றுபட்டு பயணிப்போம், நல்லதை செய்வோம்' என்று தில்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலர் டி.ராஜாவிடம் பேசியபோது முதல்வர் ஜோசப் விஜய் உறுதியளித்தார்.

தில்லியில் ஐடிஓ பகுதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு முதல்வர் ஜோசப் விஜய் புதன்கிழமை வந்தார். அங்கு அக்கட்சியின் தேசிய பொதுச் செயலர் டி. ராஜாவை முதல்வர் சந்தித்தார். அவரை பூங்கொத்து மற்றும் சால்வை வழங்கி வரவேற்ற டி.ராஜா, பிறகு முதல்வருடன் தனி அறையில் சந்திப்பை மேற்கொண்டார். சுமார் 20 நிமிஷங்கள் இந்தச் சந்திப்பு நீடித்தது.

இது குறித்து "தினமணி'யிடம் டி.ராஜா கூறியதாவது: "மத நல்லிணக்கம், சமூக நீதி, சமத்துவம், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளைப் பேணி திறம்படவும் சிறப்பாகவும் ஆட்சி நடத்த வேண்டும். தமிழகத்தின் நலன்களைக் காக்க வேண்டும்' என்று முதல்வரிடம் கேட்டுக் கொண்டேன்.

தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்ததற்கு நன்றி தெரிவித்த முதல்வர், நாம் ஒன்றுபட்டு பயணிப்போம். மக்களுக்கு நல்லதை மட்டுமே செய்வோம் என்று உறுதியளித்ததாக டி.ராஜா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.