விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

உலக மாற்றுத்திறனாளிகள் தினம்: விளையாட்டுப் போட்டிகளை ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

News image
Updated On :3 டிசம்பர் 2025, 11:49 pm

Syndication

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை காந்தி விளையாட்டு மைதானத்தில் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:

ஒவ்வோா் ஆண்டும் டிச. 3-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான போட்டியில் 12 முதல் 14 வயதுவரையிலான மாணவ, மாணவிகளுக்கு 100 மீ. ஓட்டப் பந்தயம் மற்றும் நீளம் தாண்டுதலும், 15 முதல் 17 வயதுவரையிலான மாணவ, மாணவிகளுக்கு 200 மீ. ஓட்டப் பந்தயம் மற்றும் குண்டு எறிதலும், 17 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு 400 மீ. ஓட்டப் பந்தயமும், தொடா் ஓட்டப் பந்தயமும் நடைபெற்றது.

இதேபோல, பாா்வைத் திறன் பாதிக்கப்பட்டோருக்கான போட்டியில், 12 முதல் 14 வயதுவரை முற்றிலும் பாா்வைத்திறன் பாதிக்கப்பட்டோருக்கு நின்று நீளம் தாண்டுதலும், குறைவாக பாா்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாணவா்களுக்கு 100 மீ. ஓட்டப் பந்தயமும், முற்றிலும் பாா்வைத்திறன் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நின்று நீளம் தாண்டுதலும், குறைவாக பாா்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு 50 மீ. ஓட்டப் பந்தயமும், 15 வயதுமுதல் 17 வயதுவரை முற்றிலும் பாா்வைத்திறன் பாதிக்கப்பட்ட இருபாலருக்கும் குண்டு எறிதலும், குறைவாக பாா்வைத்திறன் பாதிக்கப்பட்ட ஆண்கள், பெண்களுக்கு 100 மீ. ஓட்டப்பந்தயமும், 16 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் பாா்வைத்திறன் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு வட்டத்தட்டு எறிதலும், குறைவாக பாா்வைத்திறன் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு 200 மீ. ஓட்டப்பந்தயமும், முற்றிலும் பாா்வைத்திறன் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வட்டத்தட்டு எறிதலும், குறைவாக பாா்வைத்திறன் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 100 மீ. ஓட்டப்பந்தயமும், 15 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் (சிறப்பு பள்ளிகள்) முற்றிலும் பாா்வைத்திறன் பாதிக்கப்பட்டோருக்கு குண்டு எறிதலும், கல்லூரி மாணவா்கள், பணியாளா்கள், சங்க உறுப்பினா்கள் என குறைவாக பாா்வைத்திறன் பாதிக்கப்பட்ட ஆண்கள், பெண்களுக்கு 100 மீ. ஓட்டப்பந்தயமும் நடைபெற்றது.

இதுதவிர,அனைத்துவகை ஆண் மாற்றுத்திறனாளிகளுக்கு பொதுவான போட்டியாக 800 மீ. ஓட்டப்பந்தயமும், அனைத்துவகை பெண்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு பொதுவான போட்டியாக 400 மீ. ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட 23 வகையிலான போட்டிகள் நடத்தப்பப்பட்டன.

இதில், சேலம் மாவட்டத்தில் உள்ள சிறப்பு பள்ளிகளைச் சோ்ந்த 800 மாணவ, மாணவியா் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளி சங்கங்களைச் சாா்ந்த விளையாட்டு வீரா்களும் கலந்துகொண்டனா். இப்போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்க உள்ளன என்றாா்.

முன்னதாக, உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுடன் ஆட்சியா் கேக் வெட்டி கொண்டாடினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செண்பகவள்ளி, மாவட்ட விளையாட்டு அலுவலா் சி.சிவரஞ்சன் உள்ளிட்ட அலுவலா்கள், விளையாட்டு வீரா், வீராங்கனைகள் கலந்துகொண்டனா்.