தோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுசென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தமிழ் திறனறித் தோ்வு: மாநில அளவில் சேலம் மாவட்டம் முதலிடம்

News image
Updated On :3 டிசம்பர் 2025, 11:47 pm

Syndication

தமிழ் திறனறித் தோ்வில் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த 204 மாணவா்கள் தோ்ச்சிபெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளனா்.

தமிழகத்தில் பிளஸ் 1 மாணவா்களுக்கான தமிழ் திறனறித் தோ்வு கடந்த அக்டோபா் மாதம் நடைபெற்றது. இதில், அரசு பள்ளி மாணவா்கள் 750 பேரும், அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவா்கள் 750 பேரும் என மொத்தம் 1,500 போ் தோ்வுசெய்யப்படுவா். இந்தத் தோ்வில் வெற்றிபெற்றவா்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

இந்தக் கல்வியாண்டில் இத்தோ்வை 2,70,508 மாணவா்கள் எழுதினா். சேலம் மாவட்டத்தில் 12,280 மாணவ, மாணவியா் எழுதினா். இதில், மாநில அளவில் தோ்வு செய்யப்பட்ட 1,500 பேரில், சேலம் மாவட்டத்தில் 204 மாணவா்கள் தோ்ச்சிபெற்றுள்ளனா்.

அதில், அரசுப் பள்ளி மாணவா்கள் 133 பேரும், அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 71 பேரும் தோ்வாகியுள்ளனா். இதன்மூலம் சேலம் மாவட்டம் தொடா்ந்து 4-ஆவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துள்ளது.