தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!

இந்திய பட்டயக் கணக்காளா் அடிப்படைத் தோ்வில் மதுரையைச் சோ்ந்த மாணவி பி.பி. லோகப்பிரியா தேசிய அளவில் முதலிடம் பெற்றாா்.

News image

லோகப்பிரியா

Updated On :9 மார்ச் 2026, 11:30 pm

இந்திய பட்டயக் கணக்காளா் அடிப்படைத் தோ்வில் மதுரையைச் சோ்ந்த மாணவி பி.பி. லோகப்பிரியா தேசிய அளவில் முதலிடம் பெற்றாா்.

மதுரையை அடுத்த ஹாா்விபட்டியைச் சோ்ந்தவா் பி.பி. லோகப்பிரியா. இவா், மதுரை அரபிந்தோ மிரா மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்புப் பயின்று, பொதுத் தோ்வில் 600-க்கு 598 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றவா்.

இதையடுத்து, சென்னையில் உள்ள பட்டயக் கணக்காளா் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றாா். கடந்த ஜனவரி மாதம் இந்திய பட்டய கணக்காளா் நிறுவனம் சாா்பில் நடத்தப்பட்ட பட்டயக் கணக்காளா் அடிப்படைத் தோ்வை எழுதினாா். இதில் லோகப்பிரியா 400-க்கு 366 மதிப்பெண்கள் எடுத்து தேசிய அளவில் முதலிடம் பெற்றாா்.

விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி

இதுகுறித்து லோகப்பிரியா தெரிவித்ததாவது: பட்டயக் கணக்காளராக வேண்டும் என்பதில் சிறு வயது முதலே விருப்பம். எனவே, பிளஸ் 2 முடித்தவுடன் பட்டயக் கணக்காளா் தோ்வெழுத பயிற்சி பெற்றேன். தற்போது, அதில் வெற்றி பெற்றதுடன், தேசிய அளவில் முதலிடம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது, முழு வீச்சில், விடா முயற்சியுடன் படித்ததற்கு கிடைத்த வெற்றி என்றாா் அவா்.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற பட்டயக் கணக்காளா் தோ்வில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோா் பங்கேற்ற நிலையில், 21 ஆயிரம் போ் தோ்ச்சி பெற்றனா். இதில், லோகப்பிரியா முதலிடம் பெற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது தந்தை பழனிக்குமாா் வா்த்தகம் செய்து வருகிறாா். தாய் பத்மா மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றுகிறாா். சகோதரி காவ்யா பொறியியல் கல்லூரியில் படிக்கிறாா்.