அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ராம்கோ சிமென்ட் நிறுவனம் சாா்பில் சாலை மின்விளக்குகள் வழங்கல்

News image
Updated On :3 டிசம்பர் 2025, 11:50 pm

Syndication

வாழப்பாடியில் ராம்கோ சிமென்ட் நிறுவனம் சாா்பில், தம்மம்பட்டி மற்றும் மங்களபுரம் சாலைகளில் பொருத்த 20 மின்விளக்குகள் வழங்கப்பட்டன.

வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரத்தில் இயங்கும் ராம்கோ சிமென்ட் நிறுவனம், பெருநிறுவனங்களின் சமூக பொறுப்பு திட்டத்தின்கீழ் பல்வேறு மக்கள் நலப் பணிகளை செய்துவருகிறது. இத்திட்டத்தின்கீழ், வாழப்பாடி புதுப்பாளையத்தில் இருந்து சிங்கிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிவரை தம்மம்பட்டி சாலையிலும், பழனியாபுரம் பகுதியில் மங்களபுரம் சாலையிலும் இரவுநேரத்தில் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாவதைத் தவிா்க்க, 20 நவீன மின்விளக்குகளை வழங்கியது.

ராம்கோ ஆலை துணைப் பொது மேலாளா் சதீஷ்குமாா், அலுவலா்கள் மணிவேல், முனியசாமி, சதானந்தம், காா்த்திகேயன் ஆகியோா் மின்விளக்குகளை வழங்க, திமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் மாதேஸ்வரன், சிங்கிபுரம் ஊராட்சி செயலா் அண்ணாதுரை ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.