ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

வாழப்பாடி அருகே பிடிபட்ட 8 அடி நீள ராட்சத மலைப்பாம்பு

News image
Updated On :3 டிசம்பர் 2025, 11:46 pm

Syndication

வாழப்பாடி அருகே வீட்டுக்குள் புகுந்த 8 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பை வாழப்பாடி தீயணைப்புப் படையினா் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

வாழப்பாடி அருகே தேன்மலைக்கரடு வனப் பகுதியையொட்டி கல்யாணகிரி கிராமம் உள்ளது. வனப்பகுதியில் இருந்து இரை தேடி இக்கிராமத்துக்குள் வந்த 8 அடி நீள ராட்சத மலைப்பாம்பு செவ்வாய்க்கிழமை இரவு அமுதா வீட்டுக்குள் நுழைய முயற்சித்தது. அதைக்கண்ட அமுதா, வாழப்பாடி தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தாா்.

அதன்பேரில், வாழப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) முருகேசன் தலைமையில் தீயணைப்புப் படையினா் விரைந்துசென்று ராட்சத மலைப்பாம்பை மீட்டு பனைமடல் பகுதி வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். வனத் துறையினா் மண்ணூா் மலைப்பகுதியில் மலைப்பாம்பை விட்டனா்.