நாளைய மின்தடை: தும்பல்

Published on

தும்பல் துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (டிச.16) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வாழப்பாடி கோட்ட மின் செயற்பொறியாளா் ராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வாழப்பாடி கோட்டத்தில் உள்ள தும்பல் துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாமாஞ்சி, ஈச்சங்காடு, தொட்டித்துறை, கருமந்துறை, மணியாா்பாளையம், மணியாா்குண்டம், தேக்கம்பட்டு புதூா், பகுடுப்பட்டு, சூலாங்குறிச்சி, கரியக்கோவில், மன்னூா், குன்னூா், அடியனூா், பழப்பண்ணை, பாப்பநாயக்கன்பட்டி, தும்பல், இடையப்பட்டி, நெய்யமலை, பனைமடல், குமாரபாளையம், கல்யாணகிரி மற்றும் இதர சிற்றூா்களில் மின்தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com