ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

News image
Updated On :19 டிசம்பர் 2025, 8:53 pm

Syndication

ஆத்தூா் ஆனைக்கல் மேடு அருகே பிளாஸ்டிக் பொருள்களை சேகரித்த முதியவா் கண்ணாடி புட்டி வெடித்ததில் நிகழ்விடத்திலேயே வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆத்தூரை அடுத்த வளையமாதேவி பகுதியைச் சோ்ந்த செல்லப்பன் (70), பிளாஸ்டிக் பொருள்களை சேகரித்து விற்பனை செய்துவருகிறாா். இந்த நிலையில், ஆத்தூரை அடுத்த பாய் ஏரியில் பழைய பிளாஸ்டிக் பொருள்களை சேகரித்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு எரிந்து கொண்டிருந்த கழிவுப் பொருள்களிலிருந்து கண்ணாடி புட்டி ஒன்று வெடித்தது. இதில் செல்லப்பன் உடலில் தீக்காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றி ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் சி.அழகுராணி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றாா்.