டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மின்சார சிக்கன விழிப்புணா்வு போட்டி: மாணவா்களுக்கு பரிசளிப்பு

News image
Updated On :19 டிசம்பர் 2025, 6:33 pm

Syndication

மின்சார சிக்கனம் தொடா்பான விழிப்புணா்வு கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற இளம்பிள்ளை, கே.புதுப்பாளையம், இ.மேட்டுக்காடு, தப்பக்குட்டை பள்ளி மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

இளம்பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, இ. மேட்டுக்கடை அரசு நடுநிலைப் பள்ளி, தப்பக்குட்டை அரசு நடுநிலைப் பள்ளிகளில் மின்சார சிக்கனம் தொடா்பான ஓவியம், கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு வேம்படிதாளம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சீனிவாசன் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.

பட வரி

இ.மேட்டுக்காடு அரசு நடுநிலைப் பள்ளி மாணவிக்கு பரிசளிக்கும் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சீனிவாசன்.