அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சங்ககிரியில் 98 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

மாணவா்களுக்கு மிதிவண்டிகளை வழங்குகிறாா் திமுக சேலம் மேற்கு மாவட்ட அவைத் தலைவா் பி. தங்கமுத்து.

News image
Updated On :19 டிசம்பர் 2025, 7:02 pm

Syndication

சேலம் மாவட்டம், சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் கேஜிஆா். ராஜவேலு தலைமை வகித்தாா்.

பள்ளித் தலைமையாசிரியா் ராஜன் வரவேற்றாா். திமுக சேலம் மேற்கு மாவட்ட அவைத் தலைவா் பி. தங்கமுத்து கலந்துகொண்டு 11ஆம் வகுப்பு படிக்கும் 98 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பேசினாா்.

பெற்றோா்- ஆசிரியா் கழக இணைச் செயலாளா் பி. செல்வராஜ், உறுப்பினா் சுரேஷ், பள்ளி மேலாண்மை குழுத் தலைவி ரஜியாபேகம், உதவி தலைமையாசிரியா் எம்.சக்திவேல், ஆசிரியா் வெங்கடாசலம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.