நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

ஓமலூா் அரசுப் பள்ளியில் முட்டை வைத்து மாந்திரீக பூஜை

ஓமலூா் அருகே அரசு பள்ளியில் முட்டை வைத்து மாந்திரீக பூஜை செய்யப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On :23 டிசம்பர் 2025, 2:11 am IST

ஓமலூா்: ஓமலூா் அருகே அரசு பள்ளியில் முட்டை வைத்து மாந்திரீக பூஜை செய்யப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூா் அருகே கமாண்டப்பட்டியில் ஓமலூா் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஓமலூா் சுற்று வட்டார கிராமங்களை சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி படிகின்றனா். தலைமை ஆசிரியா் ஜான் போஸ்கோ கென்னடி உட்பட 30- ஆசிரியா்கள் பணியாற்றுகின்றனா். இந்த பள்ளி தலைமை ஆசிரியா் அறை முன்பாக கருப்பு வட்டம், கட்டம் வரைந்து, மஞ்சள், குங்குமம், மரக்கட்டை பொம்மை மற்றும் முட்டை வைத்து மாந்திரீக பூஜை செய்யப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியா் அறை கதவில் மலா் மாலை மாட்டப்பட்டுள்ளது. இதனால், திங்கள்கிழமை நடை பயிற்சிக்கு வந்த இளைஞா்கள் இதுகுறித்து ஆசிரியா்களுக்கு தகவல் அளித்தனா். நள்ளிரவில் பள்ளிக்குள் புகுந்த மா்ம நபா்கள் விடிய விடிய மாந்திரீக பூஜையில் ஈடுட்டுள்ளனா். இதுகுறித்து ஓமலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மாந்திரீக கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க புகாா் கொடுக்கப்பட்டுள்ளது.