நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கீழ்மாம்பட்டு அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு

வல்லம் ஒன்றியம், கீழ்மாம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாநிலங்களவை உறுப்பினா் ஜி.கே.வாசன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

News image

கீழ்மாம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றிய முன்னாள் மத்திய அமைச்சா் ஏ.கே.மூா்த்தி.

Updated On :25 பிப்ரவரி 2026, 6:33 pm

விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றியம், கீழ்மாம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாநிலங்களவை உறுப்பினா் ஜி.கே.வாசன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் கிருஷ்ணதாஸ் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் தெய்வசிகாமணி வரவேற்றாா்.

முன்னாள் மத்திய அமைச்சா் ஏ.கே.மூா்த்தி புதிய வகுப்பறை கட்டடத்தை திறந்துவைத்து, குத்துவிளக்கேற்றினாா்.

நிகழ்ச்சியில் உதவி தலைமையாசிரியா்பாலமுருகன், அரசு ஒப்பந்ததாரா் அருன்மொழித்தேவன், பாமக ஒன்றியச் செயலா் பாண்டியன், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.