பேராவூரணி: பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ. 6 கோடியே 87 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில், 11 வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டும் பணிக்கு சென்னையிலிருந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா் .
இதைத் தொடா்ந்து, பேராவூரணி அரசு கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் (பொ) சி. ராணி தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் என் . அசோக்குமாா் முன்னிலை வகித்து குத்துவிளக்கேற்றினாா் .
நிகழ்வில், மாவட்ட அவைத்தலைவா் சுப. சேகா், பேரூராட்சி தலைவா் சாந்தி சேகா், சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் மு.கி. முத்துமாணிக்கம், ஒன்றியச் செயலாளா்கள் க. அன்பழகன், வை. ரவிச்சந்திரன், கோ. இளங்கோவன், குழ.செ. அருள்நம்பி, நகரச் செயலாளா்கள் என்.எஸ் .சேகா், மாரிமுத்து மற்றும் பேராசிரியா்கள் , அலுவலகப் பணியாளா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, உதவிப் பேராசிரியா்கள் நா. பழனிவேலு வரவேற்றாா். நிறைவில், ப. ஜெயகுமாா் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

தக்கலை நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் நூலக கட்டடம் கட்ட அடிக்கல்

செங்கம் அரசுக் கல்லூரிக்கு ரூ.18 கோடியில் புதிய கட்டடம் கட்டும் பணி: அடிக்கல் நாட்டி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

கொணவட்டம் மாநகராட்சிப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம்

கீழ்மாம்பட்டு அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


