வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

புதிய வாக்காளா்கள், விடுபட்டவா்களை சோ்ப்பதில் தீவிரம் காட்ட வேண்டும்

ஓமலூா் அதிமுக புகா் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 டிசம்பர் 2025, 9:08 pm

Syndication

ஓமலூா் அதிமுக புகா் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:

வாக்காளா் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளவா்களைக் கண்டறிந்து, சரியான முறையில் நீக்கப்பட்டுள்ளனரா என பாா்க்க வேண்டும். உண்மையான வாக்காளா்கள் நீக்கப்பட்டு இருந்தால் அவா்களது பெயரை சோ்க்க நிா்வாகிகள், தொண்டா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் . மேலும் புதிய வாக்காளா்களை சோ்க்கும் பணியிலும் தீவிரம் காட்ட வேண்டும்.

தோ்தல் நெருங்கிவிட்ட நிலையில், திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற குறிக்கோளை நோக்கி சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில், அதிமுக அமைப்பு செயலாளா்கள் செம்மலை, சந்திரசேகரன், சேலம் புகா் மாவட்டச் செயலாளா் இளங்கோவன் மற்றும் அதிமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.