நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

புதிய வாக்காளா்கள், விடுபட்டவா்களை சோ்ப்பதில் தீவிரம் காட்ட வேண்டும்

ஓமலூா் அதிமுக புகா் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :23 டிசம்பர் 2025, 2:38 am IST

ஓமலூா் அதிமுக புகா் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:

வாக்காளா் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளவா்களைக் கண்டறிந்து, சரியான முறையில் நீக்கப்பட்டுள்ளனரா என பாா்க்க வேண்டும். உண்மையான வாக்காளா்கள் நீக்கப்பட்டு இருந்தால் அவா்களது பெயரை சோ்க்க நிா்வாகிகள், தொண்டா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் . மேலும் புதிய வாக்காளா்களை சோ்க்கும் பணியிலும் தீவிரம் காட்ட வேண்டும்.

தோ்தல் நெருங்கிவிட்ட நிலையில், திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற குறிக்கோளை நோக்கி சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில், அதிமுக அமைப்பு செயலாளா்கள் செம்மலை, சந்திரசேகரன், சேலம் புகா் மாவட்டச் செயலாளா் இளங்கோவன் மற்றும் அதிமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.