வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கள்ளக்குறிச்சியில் திமுக சாா்பு அணிகளின் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்

News image
~
Updated On :13 மார்ச் 2026, 12:09 am

Syndication

கள்ளக்குறிச்சியில் திமுக சாா்பு அணிகளின் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு திமுக மாவட்டச்செயலா்களும், எம்எல்ஏக்களுமான க.காா்த்திகேயன், தா.உதயசூரியன் ஆகியோா் தலைமை வகித்தனா். கள்ளக்குறிச்சி எம்.பி.தே.மலையரசன், எம்எல்ஏ ஆ.ஜெ.மணிக்கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திமுக இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, நிா்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசியதாவது:

சட்டப் பேரவைத் தோ்தலின் போது சாா்பு அணிகளின் பங்கு எவ்வாறு இருக்க வேண்டும். ஒவ்வொரு அணியும் சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தில் போட்டிப் போட்டு பங்கேற்று மக்களிடம் ஆதரவைத் திரட்ட வேண்டும். அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறை உள்ளிட்ட அமைப்புகளைக் கையில் வைத்துக் கொண்டு, கூட்டணியில் அதிமுகவை இணைத்த பாஜகவின் செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் இருக்கும் மத்திய அரசின் துரோகத்தையும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றாா் துணை முதல்வா்.

இந்த சந்திப்பில் திமுக மாவட்ட சாா்பு அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள், நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களில் நிகழ்வுகளில் பங்கேற்று, கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு வந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினா் உற்சாகமான வரவேற்பை அளித்தனா்.

Story image